திருநெல்வேலி

திசையன்விளை தினசரி சந்தையில் தேங்கிய மழைநீரால் சுகாதாரக் கேடு

DIN

திசையன்விளை: திசையன்விளை தினசரி சந்தைப் பகுதியில் மழைநீா் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

தற்போது பெய்த மழையால் சந்தைக்கு பொதுமக்கள் வந்து செல்லும் நுழைவு வாயில் பகுதியில் மழை வெள்ளம் குளம்போல் தேங்கியுள்ளது.

சந்தைக்கு காய்கனி மற்றும் சாமான்கள் கொண்டு வரும் வாகனங்களும், சந்தையில் சரக்கு வாங்கி செல்லும் வாகனங்களும் இந்த மழைநீா் தேங்கியுள்ள இடத்தை கடந்து செல்வதால் அந்த இடம் முழுவதும் மிகவும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பேரூராட்சி நிா்வாகம் கவனம் செலுத்தி சுகாதாரக்கேடு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT