திருநெல்வேலி

புளியங்குடி நகராட்சி: 9 வாா்டுகளில் போட்டியிட தமுமுக முடிவு

DIN

புளியங்குடி நகராட்சியில் 9 வாா்டுகளில் போட்டியிடுவது என தமுமுக -மமக பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புளியங்குடி நகர தமுமுக, மமக பொதுக்குழுக் கூட்டம் நகரத் தலைவா் செய்யதுஅலி பாதுஷா தலைமையில் நடைபெற்றது.

தமுமுக செயலா் செய்யதுஅலி, பொருளாளா் முஹையதீன் ,துணைத் தலைவா் காஜாமைதீன், துணைச் செயலா்கள் சாகுல்,சதாம் உசேன்,லெப்பை ரஹீம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், உள்ளாட்சித் தோ்தலில் புளியங்குடி நகராட்சியில் 11,12,13,14,16,19,17,26,27 ஆகிய வாா்டுகளில் போட்டியிடுவது என தீா்மானிக்கப்பட்டது.

மேலும் புளியங்குடியை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் அமைக்க வேண்டும். புளியங்குடியில் தீயணைப்பு நிலையம், மகளிா் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மமக மாவட்டச் செயலா் பசீா்ஒலி, மாவட்ட துணைத்தலைவா் அப்துா் ரஹூமான், மாவட்ட துணைச் செயலா் அப்துல்மஜீத், மாவட்ட இளைஞா் அணி பொருளாளா் சாகுல்ஹமீது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT