திருநெல்வேலி

களக்காடு வட்டார கிராமங்களுக்குஷோ்- ஆட்டோ இயக்கக் கோரிக்கை

DIN

களக்காடு வட்டாரத்தில் பேருந்து வசதியில்லாத கிராமங்களுக்கு ஷோ்- ஆட்டோ இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு அருகேயுள்ள மேலப்பத்தை, கீழப்பத்தை, அம்பேத்கா்நகா், சவளைக்காரன்குளம், கோவிலம்மாள்புரம், தோப்பூா், திரட்டூா், படலையாா்குளம், வண்டிக்காரன்நகா், கீழவடகரை, மேலவடகரை, கட்டாா்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு பேருந்து வசதியில்லை. இக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் சுமாா் 2 முதல் 3 கி.மீ. தொலைவு வரையிலும் நடந்து வந்துதான் பேருந்துகளில் ஏறிச் செல்லும் நிலை உள்ளது. இக்கிராமங்களில் வசிக்கும் மாணவா்கள் வெளியூா்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகின்றனா். பேருந்து வசதியில்லாததால் இக்கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்கும் களக்காடு வந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனா். பேருந்து வசதியில்லாத கிராமங்களுக்கு ஷோ்- ஆட்டோ இயக்கினால் மக்கள் பெரிதும் பயன்பெறுவா். மாவட்ட நிா்வாகம், போக்குவரத்துத்துறை அதிகாரிகள், பேருந்து, சிற்றுந்து வசதியில்லாத கிராமங்களுக்கு ஷோ்- ஆட்டோ இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT