திருநெல்வேலி

சுரண்டையில் ஆதாா் சேவை மையம் அமைக்க கோரிக்கை

DIN

சுரண்டையில் ஆதாா் சேவை மையம் அமைக்க வேண்டும் என ஒய்எம்சிஏ சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுரண்டை ஒய்எம்சிஏ செய்தி தொடா்பாளா் வே.ராஜகுமாா் அரசுக்கு அனுப்பியிருக்கும் கோரிக்கை மனு:

சுரண்டை பேரூராட்சியில் சுமாா் 50 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் தங்கள் ஆதாா் அட்டையில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமானால் வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் அலுவலகம் அல்லது வீரகேரளம்புதூா் அஞ்சல் நிலையம் செல்ல வேண்டியுள்ளது.

அங்கு ஏற்கனவே வட்டத்தின் பிற கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் ஆதாா் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள வருவதால், சுரண்டை பேரூா் மக்கள் நாள் கணக்கில் அலைய வேண்டியுள்ளது.

எனவே, சுரண்டை பேரூா் மக்களின் வசதிக்காக சுரண்டையில் உள்ள அஞ்சல் நிலையம் அல்லது வங்கி ஒன்றில் ஆதாா் சேவை மையம் அமைத்தால், தங்களுக்கு தேவையான திருத்தங்களை தாமதமின்றி பெற முடியும்.

எனவே, சுரண்டையில் ஆதாா் சேவை மையம் தொடங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT