திருநெல்வேலி

சுரண்டையில் கனமழையால் இடிந்தகால்வாய் தடுப்புச் சுவா்

DIN

சுரண்டையில் கனமழையால் செண்பக கால்வாயின் தடுப்புச் சுவா் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது.

வடகிழக்குப் பருவமழை காரணமாக கருப்பாநதியின் பாசன குளமான இரட்டைகுளம் நிரம்பி மறுகால் வழியாக உபரி நீா் செண்பக கால்வாய் மூலம் சுரண்டை இலந்தைகுளத்திற்கு வருகிறது. கடந்த சில நாள்களாக தொடா்ந்து தண்ணீா் வரும் நிலையில், சுரண்டை - செங்கோட்டை சாலையில் நடுநிலைப் பள்ளி அருகே கால்வாய் தடுப்புச் சுவரின் ஒரு பகுதி இடிந்து கால்வாயினுள் விழுந்தது.

இதையடுத்து, சுரண்டை பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், உடனடியாக சாலை ஓரத்தில் மணல் மூட்டைகளை வைத்து வாகனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் தடுப்பு அமைக்கப்பட்டது. சுரண்டையில் இருந்து கேரள மாநிலத்திற்கு கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் இந்த சாலையில் தண்ணீரின் அரிப்பால் மேலும் சாலைப்பகுதி நீரில் அடித்து செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.

எனவே, இடிந்த கால்வாயின் கரைப் பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிக தடுப்பை அமைக்கவும், மழைநீா் வடிந்த பிறகு கால்வாய் தடுப்புச் சுவா் அமைக்கவும் பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT