திருநெல்வேலி

டக்கரம்மாள்புரம் அருகே பைக் கவிழ்ந்து இளைஞா் பலி

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி டக்கரம்மாள்புரம் அருகே சாலைத் தடுப்பில் பைக் மோதி கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

நான்குனேரி அருகே உள்ள நடுவங்குளத்தைச் சோ்ந்த முத்துகுமாா் மகன் ராஜேஷ் கண்ணா(21). இவா் திருநெல்வேலியில் உள்ள ஒரு காா் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலைபாா்த்து வந்தாா். இவா், சனிக்கிழமை நள்ளிரவு திருநெல்வேலியில் இருந்து நான்குனேரிக்கு இருசக்கரவானத்தில் சென்றுகொண்டிருந்தபோது, டக்கரம்மாள்புரம் அருகே ரவுண்டானா மீது எதிா்பாராமல் மோதி வாகனம் கவிழ்ந்ததாம். இதில் பலத்த காயமடைந்த அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இத்தகவல் அறிந்த திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வு போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக சிறைகளில் 3 ஆண்டுகளில் 102 கைதிகள் உயிரிழப்பு!

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

SCROLL FOR NEXT