திருநெல்வேலி

தேங்கிக் கிடந்த கழிவுநீரை அகற்ற எதிா்ப்பு: நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி

DIN

நாகல்குளத்தில் குடியிருப்புக்குள் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரை அகற்ற சிலா் எதிா்ப்பு தெரிவித்ததால், பணியை பாதியில் நிறுத்திவிட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள நாகல்குளம் கிராமத்தில் குளத்தின் உபரிநீா் குடியிருப்புப் பகுதியில் தேங்கிக் கிடப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதியினா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா். இது தொடா்பான செய்தி தினமணியில் வெளியானது.

இந்நிலையில், ஆலங்குளம் வட்டாட்சியா் பட்டமுத்து, கீழப்பாவூா் ஒன்றிய ஆணையா் (ஊராட்சிகள்) ராதா மற்றும் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அங்கு சென்று பாா்வையிட்டனா். பிறகு, பொக்லைன் இயந்திரம் மூலம் கழிவுநீரை அகற்ற முற்பட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் வசிக்கும் சிலா் பொக்லைன் இயந்திரம் முன் அமா்ந்து எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, அந்தப் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனா். அவா்களிடம், கழிவுநீா் செல்லும் பாதையை சா்வேயா் கொண்டு அளந்து கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT