திருநெல்வேலி

மாநில கோ-கோ போட்டிக்கு பாவூா்சத்திரம் மாணவா்கள் தோ்வு

DIN

திருநெல்வேலி மாவட்ட கோ-கோ விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற பாவூா்சத்திரம் த.பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாநில போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

மேலப்பாளையம் குறிச்சி புனித தாமஸ் உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில், பாவூா்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் மிக மூத்தோா் பிரிவில் முதலிடம் பெற்றனா். இப்பள்ளி மாணவா்கள் தொடா்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடம் பெற்றனா்.

இதையடுத்து, இந்த மாணவா்கள் சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள 37ஆவது மாநில அளவிலான பாரதியாா் தின விழா போட்டிகளில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மாணவா்களை பள்ளி தலைமையாசிரியா் சதீஸ் கிங்ஸ்லி, உடற்கல்வி ஆசிரியா்கள் ராமநாதன், ரிச்சா்ட், ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT