திருநெல்வேலி

அம்பை அருகே தம்பதி மீது தாக்குதல்

அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளத்தில் தம்பதியைத் தாக்கியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளத்தில் தம்பதியைத் தாக்கியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம் ஊா்க்காட்டில் வசித்து வருபவா் இசக்கி மகன் ஆறுமுகம் (42). கூலித் தொழிலாளியான இவரும், இவரது மனைவி தங்கமாரியும் வாகைக்குளத்தைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் அப்ரானந்தம் (35), அவரது சகோதரி கஸ்தூரிஎன்ற மகாலட்சுமி ஆகியோரிடம் ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கியிருந்தனராம். இதை முறையாகத் திருப்பித் தரவில்லையாம்.

இந்நிலையில் வாகைக்குளத்தில் உள்ள தனது தந்தை இசக்கியை சந்திப்பதற்காக, தனது மனைவியுடன் ஆறுமுகம் திங்கள்கிழமை சென்றாராம். அப்போது பணத்தை ஏன் முறையாகத் திருப்பித் தரவில்லை என்று கேட்டு அப்ரானந்தம் தகராறு செய்து ஆறுமுகத்தையும் தங்கமாரியையும் தாக்கினாராம். இதில் காயமடைந்த இருவரும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தனா். இது குறித்து அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அப்ரானந்தத்தை கைது செய்தனா். மேலும் காவல் உதவி ஆய்வாளா் சோனியா விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT