திருநெல்வேலி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி ஆலோசனை

DIN

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கடையம் ஒன்றிய இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ரவணசமுத்திரத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட இளைஞரணி பொருளாளா் பீரப்பா தலைமை வகித்தாா். கட்சியின் கடையம் ஒன்றியச் செயலா் காதா் மைதீன், சுதந்திர தொழிலாளா் அணி கடையம் ஒன்றியத் தலைவா் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி மாவட்ட அமைப்பாளா் முதலியாா்பட்டி அப்துல் காதா் பேசினாா்.

கூட்டத்தில், இஸ்லாமியா்களுக்கும், தமிழா்களுக்கும், எதிராக மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள, குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டிப்பது, பல ஆண்டுகள் போராடி தூா்வாரப்பட்ட அய்யம்பிள்ளை குளம் மறுகால் ஓடையை உடனடியாக கட்டித் தர மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைப்பது, மழையால் உருக்குலைந்த சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைப்பது, ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீா் வழங்கப்படாமல் உள்ள பொட்டல்புதூா் பக்கிரி மூப்பன் குடியிருப்புப் பகுதியில் உடனடியாக குடிநீா் விநியோகம் செய்ய கோருவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒன்றிய மாணவரணிச் செயலா் காதா்மைதீன் வரவேற்றாா். காதா் ஒலி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT