திருநெல்வேலி

தேமுதிக 18ஆவது ஆண்டு கொடி அறிமுக விழா

DIN

தேமுதிகவின் 18ஆவது ஆண்டு கொடி அறிமுக விழா திருநெல்வேலி சிந்துபூந்துறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலர் ஏ.முகமது அலி தலைமை வகித்து கொடியேற்றினார். மேலும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தேமுதிக அறிமுக விழாவையொட்டி கொடி ஏற்றப்பட்டது. 
மாவட்ட துணைச் செயலர்கள் கே.ஏ.எம்.சிவா, பழனிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், பாலகிருஷ்ணன், முத்துகுமார், பகுதிச் செயலர்கள் ஜலீஸ் ரகுமான், மாரிமுத்து, ஷேக், அந்தோணி, மானுர் ஒன்றியச் செயலர் சின்னத்தம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 5ஆவது வார்டு இசக்கி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT