திருநெல்வேலி

கிணற்றில் விழுந்த முதியவர் மீட்பு

DIN

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவரை தீயணைப்புப்படை வீரர்கள் புதன்கிழமை உயிருடன் மீட்டனர்.
சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணியைச் சேர்ந்தவர் அப்துல்ரஹ்மான் (80). இவர், புதன்கிழமை காலையில் கீழவீரசிகாமணிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது, அங்குள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டாராம்.   100 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் 4 அடி அளவுக்கு தண்ணீர் இருந்ததால் அப்துல்ரஹ்மான் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். அவரது அலறல் சப்தம் கேட்டு அருகில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அவரை மீட்க முயற்சி எடுத்தனர். சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் பார்வதிநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து, கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த அப்துல்ரஹ்மானை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT