வாஞ்சி இயக்கம் சார்பில் பராக்கிரமபாண்டியனுக்கு விழா
தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் பராக்கிரம பாண்டியனுக்கு ஞாயிற்றுக்கிழமை விழா நடைபெற்றது.
தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் பராக்கிரம பாண்டியனுக்கு ஞாயிற்றுக்கிழமை விழா நடைபெற்றது.
வாஞ்சி இயக்கம் சார்பில் தென்காசி வர்த்தக சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு வாஞ்சி இயக்க நிறுவனர்- தலைவர் பி.ராமநாதன் தலைமை வகித்தார். தென்காசி வர்த்தக சங்கச் செயலர் பி.பரமசிவன் முன்னிலை வகித்தார்.
ஜே.சி.ஐ. தென்காசி கிளை தலைவர் கே.முருகேசன், மாரிராஜு, பரமானந்தம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகி சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேவாலயா ரவணசமுத்திரம் கிளையை சேர்ந்த சங்கிலிபூதத்தான் நன்றி கூறினார்.