திருநெல்வேலி

திசையன்விளை- மதுரைக்கு கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை

DIN

திசையன்விளையில் இருந்து மதுரைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென பயணிகள் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்க ஆலோசனைக் கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் சாலமோன் ஜவஹர் தலைமை வகித்தார். பொருளாளர் வசந்தன் முன்னிலை வகித்தார்.  செயலர் பிரைட் வரவேற்றார்.  ஸ்டீபன், ஜஸ்டின், ஈஸ்டர் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
கூட்டத்தில், திசையன்விளையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு மதுரைக்கும்,  இரவு 7.30 மணிக்கு மதுரையில் இருந்து திசையன்விளைக்கும் புதிதாக பேருந்துகள் இயக்க வேண்டும்; திசையன்விளையில் இருந்து நெல்லைக்கு 1 மணி நேரத்துக்கு ஒரு முறை என்ட் டூ என்ட்  பேருந்துகள் இயக்க வேண்டும்; பக்தர்கள் வசதிக்காக திசையன்விளையில் இருந்து குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூருக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT