திருநெல்வேலி

மணிமுத்தாறு வனப்பேச்சியம்மன் கோயிலில் மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு

DIN


மணிமுத்தாறு அருவிப் பகுதியில் அமைந்துள்ள வனப்பேச்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் மற்றும் மழை வேண்டி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.  
மணிமுத்தாறு அருவியில் அமைந்துள்ள இத்திருக் கோயிலில் ஆண்டுதோறும் அனுஷம் நட்சத்திரத்தில் வருஷாபிஷேகம் நடைபெறும்.  நிகழாண்டு வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.  
இதையொட்டி, வனப்பேச்சியம்மன், பிரம்மகுலராட்சதை , பிரம்மாட்சி அம்மன் மற்றும் சங்கிலி பூதத்தார், பட்டவராயன், தளவாய் மாடசாமி, கும்பாமுனி பெரியசாமி, அகத்தியர் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. 
மேலும் அம்மனுக்கு சந்தனக் காப்பு  அபிஷேகம் அலங்காரம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மழை வேண்டி மணிமுத்தாறு அருவியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி  ஆகிய பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT