திருநெல்வேலி

அந்தோணியார் தேவாலய திருவுருவ பவனி

DIN

மேலப்பாளையம் அருகே சேவியர்காலனியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவையொட்டி, புனிதரின் திருவுருவ பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேவாலய திருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் மாலையில் திருவிழா திருப்பலிகள் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை மாலை கிறிஸ்துராஜாபுரத்தைச் சேர்ந்த அருள்பணியாளர் அருள்லூர்து எட்வின் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து, புனித அந்தோணியாரின் திருவுருவ பவனி சேவியர் காலனியின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது.
வியாழக்கிழமை (ஜூன் 20) மாலை 6.30 மணிக்கு திருப்பலியும், அசனவிருந்தும் நடைபெறுகிறது. 21 ஆம் தேதி மாலை நற்கருணை பவனியும், 22 ஆம் தேதி மாலை அசனவிருந்தும் நடைபெற உள்ளது. 23 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு அருள்பணியாளர்கள் போஸ், ஆல்பர்ட் தலைமையில் திருப்பலியும், புதுநன்மை விழாவும் நடைபெறுகிறது. மாலையில் சமய நல்லிணக்கக் குழு சார்பில், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. ஏற்பாடுகளை பங்குத்தந்தை அந்தோணிசேவியர் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT