திருநெல்வேலி

பாளை.யில் ஓய்வூதியர் சங்க மாநாடு

DIN

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்க 3ஆவது வட்ட மாநாடு பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வட்டாரத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஈனமுத்து வரவேற்றார். இணைச் செயலர் பாலசுப்பிரமணியன் மாநாட்டை தொடங்கிவைத்தார். வட்டார நிர்வாகிகள் முருகையா, கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும். கே.டி.சி.நகர், வி.எம்.சத்திரம், தூத்துக்குடி நான்குவழிச்சாலைகளில் கூடுதலாக மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் ராமகுரு தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT