திருநெல்வேலி

நெல்லையில் ஆற்றில் மூழ்கிஇளைஞர் பலி

DIN


திருநெல்வேலி அருகேயுள்ள கருப்பந்துறை தாமிரவருணி ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.  
மேலப்பாளையம், கொட்டிகுளம், செல்வ விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து. சோடா கம்பெனி நடத்தி வருகிறார்.  இவரது மகன் ஐயப்பன் (21).  பட்டதாரி. இவர், கருப்பந்துறை தாமிரவருணி ஆற்றில் சனிக்கிழமை குளித்துள்ளார்.  அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற ஐயப்பன் தண்ணீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அருகே குளித்துக்கொண்டிருந்தவர்கள்,  ஐயப்பனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT