திருநெல்வேலி

சொக்கம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி

DIN

சொக்கம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து  முதியவர் இறந்தார்.
சொக்கம்பட்டி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (70). இவர் சொக்கம்பட்டியைச் சேர்ந்த வசந்தம் முத்துப்பாண்டி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.  ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்கு வரும்போது தவறி கிணற்றில் விழுந்துவிட்டாராம். 
இதுகுறித்து அருகிலிருந்தோர்,சொக்கம்பட்டி காவல் நிலையத்துக்கு  தகவல் அளித்தனர். இதையடுத்து கடையநல்லூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, அவரது சடலத்தை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT