திருநெல்வேலி

மருத்துவ விழிப்புணர்வு:  கடையநல்லூர் மருத்துவருக்கு விருது

DIN


மருத்துவ வசதி கிடைக்காத ஏழைகளுக்கு மருத்துவ சேவையாற்றிய கடையநல்லூர் மருத்துவர் மூர்த்தி சிறந்த மருத்துவருக்கான விருதை பெற்றுள்ளார்.
காது கேளாதோர் நலம்,  குழந்தைகள் நலம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து சிறப்பான சேவையாற்றியமைக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
வேலூரில் நடைபெற்ற அரிமா கூட்டு மாவட்ட பத்தாவது மாநாட்டில் , அரிமா உடனடி முன்னாள் ஆளுநர் சுந்தர்ராஜன் முன்னிலையில், கூட்டு மாவட்டத் தலைவர் விஜயகுமார் இவ்விருதை,  அரிமா மாவட்டத் தலைவர் மருத்துவர் மூர்த்திக்கு வழங்கினார். மருத்துவர் மூர்த்தியை,  மாவட்ட அரிமா ஆளுநர் பிரகாஷ் , ஆளுநர் (தேர்வு) முருகன்,  துணை ஆளுநர்கள் (தேர்வு) ஜஸ்டின்பால், ஜெகந்நாதன் மற்றும் குற்றாலம் விக்டரி அரிமா தலைவர் தெய்வநாயகம், செயலர் கனகராஜ்குமார், பொருளாளர் வெங்கடேஸ்வரன் முன்னாள் தலைவர்கள் ஆடிட்டர் நாராயணன், கணேசமூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

SCROLL FOR NEXT