திருநெல்வேலி

கரிசல்பட்டி, மேலக்கல்லூர் துணை மின்நிலைய பகுதிகளில் மே 18 மின்தடை

DIN

கரிசல்பட்டி, மேலக்கல்லூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இந்த மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 18) மின் விநியோகம் இருக்காது.
இது தொடர்பாக கல்லிடைக்குறிச்சி மின்கோட்ட செயற்பொறியாளர் (விநியோகம்) ஏ.ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
கரிசல்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், சனிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளன் குடியிருப்பு,  பட்டன்காடு, இடையன்குளம்,  கங்கனாங்குளம்,  பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம்,  சுப்பிரமணியபுரம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.
கல்லூர், சுத்தமல்லியில்...
மேலக்கல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கல்லூர், சுத்தமல்லி சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை ( மே 18) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை  மேலக்கல்லூர், சேரன்மகாதேவி, சுத்தமல்லி, சீதபற்பநல்லூர், சங்கன்திரடு மற்றும் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT