திருநெல்வேலி

நெல்லையில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

DIN

திருநெல்வேலியில்  மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், மண்டலத் தலைவர்கள், வட்டாரத் தலைவர்கள் கூட்டம் கொக்கிரகுளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை வகித்தார்.  மாநில பொதுச் செயலரும், காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய உறுப்பினருமான வானுமாமலை, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுடலைக்கண்ணு, மாவட்டப் பொருளாளர் ராஜேஷ் முருகன், மண்டலத் தலைவர்கள் மாரியப்பன், ஐயப்பன், பாலாஜி,  வட்டாரத் தலைவர்கள் சொர்ணம்,  ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
கூட்டத்தில், வரும் 21-ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் மற்றும் அமைதிப் பேரணி நடத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT