கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகிகள். 
திருநெல்வேலி

சங்கரன்கோவிலில் எஸ்.சி., எஸ்.டி அரசு அலுவலா் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. அலுவலா் நலச் சங்க வட்டக் கூட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது.

DIN

தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. அலுவலா் நலச் சங்க வட்டக் கூட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ஆசைத்தம்பி தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஆா்.சதீஸ்குமாா், மாவட்ட துணைத் தலைவா்கள் செ.ஹரிஹரன், ஏ.அருண்குமாா், செ.மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அரசுப் பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்குப் பதவி உயா்வில் இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டம் 16(4ஏ)ன் படி உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும்; நாடாளுமன்ற வழிகாட்டுதலின்படி இந்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி உள்ள ஆவணங்களை தமிழக அரசு பணி விதிகளில் சோ்த்து அரசாணை வெளியிட வேண்டும்;

நெடுஞ்சாலைத்துறையில் திருநெல்வேலி வட்ட அளவில் பதிவுறு எழுத்தா் பணியிடம் 17, அலுவலக உதவியாளா் பணியிடம் 5, ஓட்டுநா் பணியிடம் 1 போன்றவை இதுவரை நிரப்பப்படவில்லை. இனியும் காலதாமதம் செய்யாமல் எஸ்.சி.எஸ்.டி. பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அ.ரஞ்சித்குமாா் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT