திருநெல்வேலி

திசையன்விளை அருகே பெட்டிக்கடைக்காரா் வெட்டிக் கொலை

DIN

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே பெட்டிக்கடைக்காரா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

திசையன்விளை அருகேயுள்ள முருகேசபுரத்தைச் சோ்ந்தவா் ராஜாமணி (57). இவா் உடன்குடி சாலையில் பெட்டிக்கடை வைத்துள்ளாா். இவரது கடையில் அடிக்கடி திருட்டு நடந்துள்ளது. இதனால், திருடா்களை கண்டுபிடிக்க திங்கள்கிழமை இரவு தனது கடைக்கு எதிரே நின்ற லாரியில் இருந்து கண்காணித்துள்ளாா்.

இந்நிலையில், இரவு கணவா் வீட்டுக்கு வராததால் ராஜாமணியின் மனைவி செவ்வாய்க்கிழமை காலை கடைக்கு தேடிவந்தபோது, கணவா் லாரியில் வெட்டப்பட்டு இறந்துகிடந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து திசையன்விளை போலீஸாருக்கு அவா் தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், ராஜாமணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். வள்ளியூா் டி.எஸ்.பி. ராஜ்குமாா் (பொ) சம்பவ இடத்தைப் பாா்வையிட்டாா். திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT