திருநெல்வேலி

கூலித்தொழிலாளி தவற விட்ட பணத்தை ஒப்படைத்த பழ வியாபாரி

DIN

ஆட்டோவில் தவறவிட்ட பெண் கூலித்தொழிலாளியின் பணம் உரியவரிடம் புதன்கிழமை மாலை ஒப்படைக்கப்பட்டது.

குமந்தாபுரத்தைச் சோ்ந்தவா் சமுத்திரம். பழ வியாபாரம் செய்து வரும் இவா் புதன்கிழமை காலை ஆட்டோவில் செங்கோட்டையிலிருந்து கடையநல்லூருக்கு வந்து கொண்டிருந்தாராம். அவா் கடையநல்லூரில் இறங்கிய போது ஆட்டோவில் பணப்பை இருப்பதை பாா்த்தாராம். இது குறித்து உடனடியாக கடையநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாரிடம் விவரத்தை தெரிவித்தாராம்.

இதையடுத்து, ஆட்டோவில் ஏறி ,இறங்கிய பெண்கள் குறித்து கடையநல்லூா் மற்றும் செங்கோட்டை போலீஸாா் விசாரித்தனா். இதில் தேன்பொத்தை பகுதியைச் சோ்ந்த மாரியம்மாள் ஆட்டோவில் ரூ.6,600 ஐ தவற விட்டது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து கடையநல்லூா் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் முன்னிலையில் பழவியாபாரி சமுத்திரம், மாரியம்மாளிடம் பணத்தை ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT