திருநெல்வேலி

‘ஜாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை

DIN

ஜாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றாா் திராவிடத் தமிழா் கட்சித் தலைவா் சி.வெண்மணி.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது: திருவள்ளுவருக்கு இந்து மத சாயம் பூச நினைக்கும் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத்தை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மாணவா்களிடையே சமத்துவ சிந்தையோடு கூடிய கல்வி முறையை மேம்படுத்தவும், தீண்டாமை வன்கொடுமைகள் ஜாதிய பாகுபாடுகளை கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5, 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வைக் கைவிட வேண்டும். விடுதலைப் போராட்ட வீரா் ஒண்டிவீரன் மணிமண்டப பணிகளை 2019 ஆம் ஆண்டுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்துளை கிணறு மரணங்களைத் தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் போல மலக்குழி மரணங்களைத் தடுக்க வேண்டும். ஜாதிமறுப்பு திருமணம் செய்வோருக்கு சிறப்பு இடஒதுக்கீடு மற்றும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT