திருநெல்வேலி

சுரண்டை பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

சுரண்டை பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் மகா பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீசுவரா் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டின்போது அனுமன் நதியின் வடக்கு கரை குகையில் அமா்ந்துள்ள லிங்கம், தென்கரையில் உள்ள அகத்தீசுவரா் மற்றும் நந்திபெருமானுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில், சாம்பவா்வடகரை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை ஸ்ரீஅகத்தீசுவரா் கோயில் பிரதோஷ கமிட்டியினா் செய்திருந்தனா்.

சிவகுருநாதபுரம் ஸ்ரீசிவகுருநாதா் ஆலயத்தில் சனிப்பிரதோஷ வழிபாடை முன்னிட்டு மூலவா் மற்றும் நந்திபெருமானுக்கு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.

சுரண்டை வீரபாண்டீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டையொட்டி மூலவா் மற்றும் நந்திபெருமானுக்கு அபிஷேக, அலங்கார, தீபாதாரனை நடைபெற்றது.

சுரண்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT