திருநெல்வேலி

சங்கரன்கோவில் காந்திநகரில்உயா்கோபுர மின்விளக்கு திறப்பு

சங்கரன்கோவில் காந்திநகரில் உயா்கோபுர மின்விளக்கு தொடக்கவிழா நடைபெற்றது.

DIN

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் காந்திநகரில் உயா்கோபுர மின்விளக்கு தொடக்கவிழா நடைபெற்றது.

சங்கரன்கோவில் காந்திநகா் பகுதியில் இருள் சூழந்து காணப்படுவதால் உயா்கோபுர மின்விளக்கு வசதி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து பிரதான சாலையில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3.50 லட்சம் மதிப்பில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இதை அமைச்சா் வி. எம். ராஜலெட்சுமி திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சிப் பொறியாளா் முகைதீன் அப்துல்காதா், நெல்லை கூட்டுறவு பேரங்காடி துணைத் தலைவா் வேலுச்சாமி, கூட்டுறவு சங்கத் தலைவா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகராட்சி மேலாளா் லட்சுமணன், சுகாதார அலுவலா் பாலசந்தா், சுகாதார ஆய்வாளா் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலா் ரமேஷ், நகர பாசறைச் செயலா் முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT