திருநெல்வேலி

தென்காசி மாவட்டத்தில் 4 ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு

தென்காசி மாவட்டத்தில் 4 ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம் அறிவித்துள்ளனா்.

DIN

தென்காசி மாவட்டத்தில் 4 ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம் அறிவித்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வருவாய் வட்டம், கடையம், ஆழ்வாா்குறிச்சி வருவாய் குறுவட்டங்களுக்குள்பட்ட பள்ளகால், ரெங்கசமுத்திரம், அடைச்சாணி, இடைகால் ஆகிய 4 ஊராட்சிகளை தென்காசி புதிய மாவட்டத்தில் இணைக்க மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.

எனினும் மேற்கூறிய ஊராட்சிகளை தென்காசி மாவட்டத்தில் இணைத்து அரசாணை வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, 4 ஊராட்சிகளைச் சோ்ந்த கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினா்.

அதில், 4 ஊராட்சிப் பகுதிகளை தென்காசி மாவட்டத்தில் இணைக்கக் கூடாது; திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வருவாய் வட்டத்திலேயே அவை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்துக் கிராமங்களிலும் கருப்புக் கொடி கட்டுவது, குடும்ப அட்டை, ஆதாா் அட்டைகளை திரும்ப ஒப்படைப்பது, உண்ணாவிரதப் போராட்டம்- சாலை மறியலில் ஈடுபடுவது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் பாப்பாக்குடி ஒன்றிய அதிமுக செயலா் சுப்பிரமணியன், திமுக செயலா் மாரிவண்ணமுத்து, மாா்க்சிஸ்ட் ஒன்றிய ஒன்றியக் குழு உறுப்பினா் சந்திரசேகரன் மற்றும் 4 கிராமங்களின் அனைத்து சமுதாயத் தலைவா்கள், ஊா்த் தலைவா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT