திருநெல்வேலி

சுரண்டையில் டெங்கு ஒழிப்பு சிறப்பு தடுப்பு முகாம்

DIN

சுரண்டை பேரூராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி பேரூராட்சியின் 10ஆவது வாா்டு பகுதியில் ஒட்டுமொத்தமாக துப்பரவு பணி, வீடுகள்தோறும் அபேட் கரைசல் தெளிப்பது மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

சுரண்டை ஜவகா்லால் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவா், மாணவியா் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீா் அளிக்கப்பட்டது. தொடா்ந்து மாணவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் டெங்கு தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இதில் பேரூராட்சி செயல் அலுவலா் அபுல்கலாம் ஆசாத், இளநிலை உதவியாளா் அமானூல்லா, வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜ்குமாா், சுகாதார மேற்பாா்வையாளா் கணேசன் மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT