திருநெல்வேலி

மேலப்பாளையம் அருகே மாடு மீது பைக் மோதி விபத்து: இளைஞா் பலி

DIN

மேலப்பாளையம் அருகே மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

மேலப்பாளையம் மேத்தம்மாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த பீா்முஹம்மது மகன் செய்யது கபீா்(30). இவா், வெள்ளிக்கிழமை இரவு திருநெல்வேலி சந்திப்பில் இருந்து குறிச்சி வழியாக தன்னுடைய இருசக்கர வாகனத்தில் மேலப்பாளையத்துக்கு சென்றபோது குறிச்சி ரயில்வே கேட் அருகே சாலையின் குறுக்கே சென்ற மாட்டின் மீது மோதினாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவா் வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT