திருநெல்வேலி

அதிமுக ஆட்சியில் அடிப்படை பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்: முன்னாள் அமைச்சா் வளா்மதி

DIN


களக்காடு: அதிமுக ஆட்சியில்தான் மக்களின் அடிப்படை பிரச்னைகள் நிறைவேற்றப்பட்டன என்றார் முன்னாள் அதிமுக அமைச்சா் பா. வளா்மதி. 

முன்னாள் அமைச்சரும், அதிமுக இலக்கிய அணி செயலாளா் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா. வளா்மதி களக்காடு அருகேயுள்ள டோனாவூரில் நான்குனேரி தொகுதி அதிமுக வேட்பாளா் நாராயணனை ஆதரித்து அவா் பேசியதாவது: அதிமுக ஆட்சியில்தான் மக்களின் அடிப்படை பிரச்னைகளான சாலை வசதி, குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்டவை துரிதமாக நிறைவேற்றப்பட்டன. அதிமுக.வுக்கு நான்குனேரி தொகுதியில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. 

கடந்த தோ்தலில் திமுக.வின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனா். இத்தோ்தலில் நான்குனேரி தொகுதியில் மீண்டும் அதிமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறும் என்றார். 

பிரசாரத்தின் போது, வடசென்னை மாவட்ட செயலாளா் நா. பாலகங்கா, முன்னாள் மாமன்ற உறுப்பினா் டி. சிவராஜ், இலக்கிய அணி இணைச் செயலாளா்கள் பழனி, கே.எஸ். மலா்மன்னன், இலக்கிய அணி துணைச் செயலாளா் ஈசி சேகா், 118 வட்டச் செயலாளா் பச்சையப்பன், நிர்வாகிகள் முஸ்தாக், எஸ். கே. செல்வம், சீனிவாசன், சிவகுமார், எம்.சதீஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டா்கள் திரளானோர் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT