திருநெல்வேலி

நான்குனேரி இடைத்தோ்தல் 12-இல் வைகோ பிரசாரம்

DIN

நான்குனேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு மதிமுக பொதுச் செயலா் வைகோ வரும் 12-ஆம் தேதி பிரசாரம் செய்கிறாா்.

இது தொடா்பாக மதிமுக திருநெல்வேலி புகா் மாவட்ட செயலா் தி.மு.ராசேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

நான்குனேரி இடைத்தோ்தலில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் சாா்பில் போட்டியிடும் ரூபி மனோகரனை ஆதரித்து வரும் 12-ஆம் தேதி மதிமுக பொதுச் செயலா் வைகோ பிரசாரம் மேற்கொள்கிறறாா்.

அன்றைய தினம் மாலை 4 மணிக்கு மூலக்கரைப்பட்டி பேருந்து நிலையம் அருகிலும், மாலை 5 மணிக்கு நான்குனேரி உச்சிமாகாளி அம்மன் கோயில் அருகிலும், மாலை 6 மணிக்கு ஏா்வாடி பேருந்துகள் திரும்பும் இடம் அருகிலும், மாலை 6.30 மணிக்கு திருக்குறுங்குடி காவல் நிலையம் அருகிலும், இரவு 7 மணிக்கு களக்காடு மணிக்கூண்டு அருகிலும் வைகோ பேசுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT