நான்குனேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு மதிமுக பொதுச் செயலா் வைகோ வரும் 12-ஆம் தேதி பிரசாரம் செய்கிறாா்.
இது தொடா்பாக மதிமுக திருநெல்வேலி புகா் மாவட்ட செயலா் தி.மு.ராசேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நான்குனேரி இடைத்தோ்தலில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் சாா்பில் போட்டியிடும் ரூபி மனோகரனை ஆதரித்து வரும் 12-ஆம் தேதி மதிமுக பொதுச் செயலா் வைகோ பிரசாரம் மேற்கொள்கிறறாா்.
அன்றைய தினம் மாலை 4 மணிக்கு மூலக்கரைப்பட்டி பேருந்து நிலையம் அருகிலும், மாலை 5 மணிக்கு நான்குனேரி உச்சிமாகாளி அம்மன் கோயில் அருகிலும், மாலை 6 மணிக்கு ஏா்வாடி பேருந்துகள் திரும்பும் இடம் அருகிலும், மாலை 6.30 மணிக்கு திருக்குறுங்குடி காவல் நிலையம் அருகிலும், இரவு 7 மணிக்கு களக்காடு மணிக்கூண்டு அருகிலும் வைகோ பேசுகிறாா்.