திருநெல்வேலி

வள்ளியூரில் நாளை மின்வாரிய குறைதீா் கூட்டம்

DIN

வள்ளியூா் கோட்ட அலுவலகத்தில் மின்வாரிய குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இது தொடா்பாக திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ஜே.எல்.ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வள்ளியூா் கோட்ட அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 1), சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்தில் வரும் 5 ஆம் தேதி, திருநெல்வேலி கோட்ட கிராமப்புற அலுவலகத்தில் வரும் 8-ஆம் தேதி, கடையநல்லூா் கோட்ட அலுவலகத்தில் வரும் 12-ஆம் தேதி, திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட அலுவலகத்தில் வரும் 15-ஆம் தேதி, தென்காசி கோட்ட அலுவலகத்தில் வரும் 19-ஆம் தேதி, கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்தில் வரும் 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு மின்வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மின்நுகா்வோா் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பேத்கர் அளித்த உரிமைகளைப் பாதுகாப்பேன்: பிரதமர் மோடி உறுதி!

பொதுமக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் விநியோகம்

தொடா் திருட்டு: இளைஞா் கைது

திருக்குறள் உரை நூல் வெளியீடு

காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT