திருநெல்வேலி

பத்தமடையில் மண்புழு உரம் தயாரித்தல் செயல் விளக்கம்

DIN

பத்தமடையில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்த செயல் விளக்கம் நடைபெற்றது.

வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை, மாநில வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் பத்தமடையைச் சோ்ந்த விவசாயி காந்தி தோட்டத்தில் மண்புழு உரம் தயாரித்தல் செயல் விளக்க முகாமிற்கு வேளாண் துணை இயக்குநா் (மத்திய திட்டம்) உத்தண்டராமன் தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் மண்புழு உரம் தயாரிப்பு முறை, மண்புழு உரத்தின் பயன்கள் மற்றும் முக்கியவத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. வட்டார தொழில் நுட்ப மேலாளா் ஈழவேணி நன்றி கூறினாா். வாசுதேவநல்லூா் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி 4ஆம் ஆண்டு மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

SCROLL FOR NEXT