ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் ஸ்ரீ சந்தி மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, திங்கள்கிழமை காலை விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சுமங்கலி பூஜை மற்றும் தம்பதி பூஜை, மாலையில் தாமிரவருணி புனித நீர் கொண்டு வருதல், இரவு முதல் கால யாக பூஜை ஆகியவை நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை காலை 2 ஆம் கால யாகபூஜை, மாலையில் தீபாராதனை ஆகியவையும் நடைபெற்றன. புதன்கிழமை காலை திருமுறை பாராயணம்,
4 ஆவது கால யாக பூஜை, பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு, தொடர்ந்து விமானம், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மஹா அபிஷேகம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.