திருநெல்வேலி

பூலாங்குளம் சந்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் ஸ்ரீ சந்தி மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
 இதையொட்டி, திங்கள்கிழமை காலை விநாயகர் பூஜை,   கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சுமங்கலி பூஜை மற்றும் தம்பதி பூஜை,  மாலையில் தாமிரவருணி புனித நீர் கொண்டு வருதல்,  இரவு முதல் கால யாக பூஜை ஆகியவை நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை  காலை 2 ஆம் கால யாகபூஜை,  மாலையில்  தீபாராதனை ஆகியவையும் நடைபெற்றன. புதன்கிழமை காலை  திருமுறை பாராயணம்,  
4 ஆவது கால யாக பூஜை,  பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு, தொடர்ந்து  விமானம், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மஹா அபிஷேகம்,  தீபாராதனை  மற்றும் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT