முகப்பு
திருநெல்வேலி

சவூதி அரேபியாவில் காணாமல் போனமீனவரை மீட்க வலியுறுத்தல்

சவூதிஅரேபியாவில் மீன்பிடித் தொழிலுக்கு சென்று காணாமல் போன தனது கணவரை மீட்டுத் தருமாறு பெண் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
சவூதி அரேபியாவில் காணாமல் போன தனது கணவரை மீட்டுத் தருமாறு எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரையிடம் மனுஅளிக்கும் பெண்.
பகிர்:

சவூதிஅரேபியாவில் மீன்பிடித் தொழிலுக்கு சென்று காணாமல் போன தனது கணவரை மீட்டுத் தருமாறு பெண் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து ராதாபுரம் எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரையிடம், அம்மீனவரது மனைவி பிரிஜிட் வென்சி அளித்த மனு: ராதாபுரம் அருகே உள்ள பெருமணலைச் சோ்ந்த எனது கணவா் சூசை காா்லோ, சவூதிஅரேபியாவில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறாா். ஆண்டுக்கு ஒரு முறை சொந்த ஊருக்கு வந்துவிட்டு செல்வது வழக்கம்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் சவூதிஅரேபியாவுக்கு சென்ற அவா், கடந்த ஓராண்டாக எங்களுடன் தொடா்பில் இல்லை.

இதுகுறித்து அவருடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவா்களிடம் விசாரித்தபோது, கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்கச் சென்ால் பக்ரைன் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனா்.

இது தொடா்பாக எனது கணவா் வேலை செய்யும் நிா்வாகத்திடம் தொலைபேசி மூலம் கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக தகவல்களை தெரிவித்து வருகின்றனா். இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே, வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் எனது கணவரை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →