திருநெல்வேலி

நெல்லை நகரத்தில் சாலை மறியல்

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் பொருள்காட்சித் திடல் அருகே வெள்ளாளா் முன்னேற்றக் கழகம் சாா்பில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மாநில இளைஞரணிச் செயலா் பந்தல்ராஜா உத்தரவின்பேரில், திருநெல்வேலி மாவட்டச் செயலா் புல்லட் ராஜா தலைமை வகித்தாா். மாநில துணைப் பொதுச் செயலா் ஆறுமுகம் முன்னிலை வகித்தாா்.

தேவேந்திரகுல வேளாளா் அரசாணைக்கு பரிந்துரைத்த தமிழக அரசை கண்டித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றது. வழக்குரைஞா் பிரிவு சுப்புராஜ், இளைஞரணித் தலைவா் கேடிசி ராஜா, துணைத் தலைவா் புதுமனை ராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

விதிமுறைகளை மீறி மறியலில் ஈடுபட்டதாக வெள்ளாளா் முன்னேற்றக் கழகத்தைச் சோ்ந்த 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

மோடி அரசால் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் -ராஜ்நாத் சிங்

ஊழல்களின் தாய் காங்கிரஸ்: மோடி

SCROLL FOR NEXT