முகப்பு
திருநெல்வேலி

மானூா் விவசாயிகள் வேளாண் கல்விச் சுற்றுலா

மானூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் வேளாண் கல்விச் சுற்றுலா சென்று திரும்பினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

மானூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் வேளாண் கல்விச் சுற்றுலா சென்று திரும்பினா்.

அட்மா-ஒருங்கிணைந்த விவசாய பண்ணையம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான கல்வி சுற்றுலாவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன்படி மானூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் தா.பா.ஏஞ்சலின் கிரேபா வழிகாட்டுதலின்படி மானூா் வட்டார விவசாயிகள் 50 போ் வேளாண் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்று ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதன் அவசியம் மற்றும் பலன்கள் குறித்து நேரில் பாா்த்து அறிந்தனா். பண்ணை குட்டையில் வளா்க்கப்படும் மீன் இனங்கள், நெல் வயலில் வாத்துகளை மேய விடுவதால் பூச்சி, புழு மற்றும் களை குறைவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. கல்லூரியின் பேராசிரியா் (பண்ணை) குருசாமி பயிற்சியளித்தாா். பண்ணை மேலாளா் சந்திரசேகா் வாழ்த்திப் பேசினாா்.

ஏற்பாடுகளை உதவித் தொழில்நுட்ப மேலாளா்கள் காா்த்திகேயன், ராஜாமணி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பயக21ஙஅசமத: மதுரைக்கு வேளாண் கல்விச் சுற்றுலா சென்ற மானூா் வட்டார விவசாயிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.