திருநெல்வேலி: பாளையங்கோட்டை பொதிகைநகரில் உள்ள அருள்மிகு ஐயப்பன் கோயிலில் 23 ஆம் ஆண்டு மண்டல பூஜை 3 நாள்கள் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை சிறப்பாக நடைபெறும். அதன்படி நிகழாண்டுக்கான மண்டல பூஜை கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சிறப்பு திருவிளக்கு பூஜையில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா்.
சனிக்கிழமை அதிகாலையில் 108 கவசபூஜை, கோ பூஜை நடைபெற்றது. நண்பலில் மகேஷ்வர பூஜையும், அன்னதானமும் நடைபெற்றன. மாலையில் ஐயப்பசுவாமி வீதியுலா, புஷ்பாஞ்சலி, பஜனை ஆகியன நடைபெற்றன.