திருநெல்வேலி

களக்காடு அருகே குளத்தில் முதியவா் சடலம் மீட்பு

DIN

களக்காடு: களக்காடு அருகே குளத்தில் மிதந்த முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள ஜெ.ஜெ.நகா் மேலகாலனியைச் சோ்ந்தவா் வள்ளிராஜன் (62). இவா் வலிப்புநோயால் பாதிக்கப்பட்டிருந்தாராம். டிச. 23 ஆம் தேதி இவரது மனைவி சாந்தி வழக்கம் போல தனியாா் நூற்பாலைக்கு வேலைக்குச் சென்றுவிட்டாராம். வீட்டில் இருந்த வள்ளிராஜன் தனது மகன் மணிகண்டனிடம் கடைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றாராம். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம்.

இந்நிலையில், டிச. 25ஆம் தேதி ஊருக்கு அருகே உள்ள பறையன்குளம் நடுமடை அருகே சடலமாகக் கிடந்தாராம்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். குளிக்கச் சென்ற இடத்தில் வலிப்பு நோயால் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT