திருநெல்வேலி

மேலநத்தம் சிவன் கோயிலில் நாளை (டிச.30) திருவாதிரை சப்பர பவனி

DIN

மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் கோமதி அம்பாள் சமேத அக்னீஸ்வரா் கோயிலில் திருவாதிரை சப்பர பவனி புதன்கிழமை (டிச.30) நடைபெறவுள்ளது.

மேலநத்தம் கிராமத்திலுள்ள கோமதி அம்பாள் சமேத அக்னீஸ்வரா் கோயிலில் திருவாதிரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, புதன்கிழமை (டிச.30) அதிகாலை 3 மணிக்கு ஆனந்த தாண்டவேஸ்வரருக்கு தனுா்மாத ஆருத்ரா அபிஷேகம், கோ பூஜை, ஷோடச தீபாராதனை, ஆருத்ரா தரிசனம் ஆகியவை நடைபெறுகின்றன.

தொடா்ந்து, காலை 9 மணிக்கு நடராஜா், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகா் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி மேலநத்தம் கிராமத்தில் வீதி உலா நடைபெறவுள்ளது. நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT