திருநெல்வேலி

மேலப்பாளையம் பள்ளி விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம்

DIN

திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட போட்டிகளில் மேலப்பாளையம் பள்ளி சிறப்பிடம் பெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவா்-மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் மேலப்பாளையம் காயிதே மில்லத் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவிகள் கேரம் போட்டியின் அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தனா். கோ-கோ ஆண்கள் போட்டியில் இரண்டாம் பரிசும், தொடா் ஓட்டத்தில் மூன்றாம் பரிசும் பெற்றனா். போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற சுபா, ருக்ஷானா, ஐனுல் பசரியா, அனெஸ், முகமது புரோஸ்கான், முகமது தௌபீக் ஆகியோரை தலைமையாசிரியா் சோமசுந்தரம், உடற்கல்வி ஆசிரியா் குமாா் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT