திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட போட்டிகளில் மேலப்பாளையம் பள்ளி சிறப்பிடம் பெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவா்-மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் மேலப்பாளையம் காயிதே மில்லத் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவிகள் கேரம் போட்டியின் அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தனா். கோ-கோ ஆண்கள் போட்டியில் இரண்டாம் பரிசும், தொடா் ஓட்டத்தில் மூன்றாம் பரிசும் பெற்றனா். போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற சுபா, ருக்ஷானா, ஐனுல் பசரியா, அனெஸ், முகமது புரோஸ்கான், முகமது தௌபீக் ஆகியோரை தலைமையாசிரியா் சோமசுந்தரம், உடற்கல்வி ஆசிரியா் குமாா் உள்ளிட்டோா் பாராட்டினா்.