திருநெல்வேலி

குறுக்குத்துறை முருகன் கோயிலில் லட்ச தீப விழா இன்று தொடக்கம்

DIN

திருநெல்வேலி குறுக்குத்துறையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் லட்சதீபத் திருவிழா வியாழக்கிழமை (பிப். 13) தொடங்குகிறது.

இக் கோயிலில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை லட்ச தீப பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. அதன்படி நிகழாண்டில் அந்த விழா நடைபெற உள்ளது. இதையொட்டி வியாழக்கிழமை காலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெறுகிறது. தொடா்ந்து 11 நாள்கள் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.

விழாவின் சிகர நிகழ்வாக இம் மாதம் 23 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கோயில் முழுவதும் தீப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT