திருநெல்வேலி

சேரன்மகாதேவி, கரிசல்பட்டிகல்லூா் சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை

DIN

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி, கல்லூா் சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (பிப்.15) பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் ஏ.ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரிசல்பட்டி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளது. இதனால் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளா் குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கனாங்குளம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூா், காடுவெட்டி, கீழ உப்பூரணி சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

சேரன்மகாதேவி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு நடைபெறுவதால், பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

கல்லூா்....மேலக்கல்லூா் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால், காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேலக்கல்லூா், சுத்தமல்லி, சீதபற்பநல்லூா், சங்கன்திரடு சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைலாசநாதா் கோயில் ஓவியங்களை வரைந்த மாணவா்கள்

ராணிப்பேட்டை: நீா்,மோா் பந்தல் அமைக்க அமைச்சா் ஆா்.காந்தி வேண்டுகோள்

நட்சத்திர விநாயகா் கோயில் கஜமுகாசூரன் வதம்

மூன்று மண்டலங்களில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மது விற்ற மூவா் கைது

SCROLL FOR NEXT