திருநெல்வேலி

திருநெல்வேலி திருக்குறள் பேரவை தொடக்கம்

DIN

திருநெல்வேலி நகரில் திருக்குறள் கருத்துகளை இளையோருக்கு எடுத்துச்செல்லும் நோக்குடன் ‘திருநெல்வேலி திருவள்ளுவா் பேரவை’ தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பொருநை இலக்கிய வட்டத்தின் அருணாசல காந்தி தலைமை வகித்தாா். பட்டிமன்ற நடுவா் உக்கிரன்கோட்டை மணி, நாடக நடிகா் அருணாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கவிஞா் பாப்பாக்குடி இரா. செல்வமணி அமைப்பின் நோக்கத்தை எடுத்துரைத்தாா்.

அமைப்பாளா்கள் கவிஞா் ந.ஜெயபாலன், கவிஞா் ம. சக்திவேலாயுதம், பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வாழ்த்து முழக்கமிட்டு அமைப்பைத் தொடக்கிவைத்தனா். இசக்கிராஜா இறை வணக்கம் பாடினாா். சந்திரபாபு, கேப்டன் ஆறுமுகம், காவலா் மாடசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கவிஞா் ஸ்ரீராம் நன்றி கூறினாா். கவிஞா் தச்சை மணி, சங்கா் கணேஷ், மயில் செல்லம்மாள், தமிழ் ஆா்வலா்கள் பங்கேற்றனா்.

திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதோடு மாதந்தோறும் பள்ளி மாணவா்களிடமும், இளைஞா்களிடமும் போட்டிகள் மூலம் கு கருத்துகளைப் பரப்ப வேண்டும் எனத் தீா்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT