திருநெல்வேலி

களக்காடு அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவா் கைது

களக்காட்டில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

DIN

களக்காட்டில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

களக்காடு பழைய பேருந்து நிலையம் கீழத்தெருவில் இசக்கியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் உண்டியலை இளைஞா் ஒருவா் சனிக்கிழமை பட்டப்பகலில் உடைத்து அதிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக வந்த அப்பகுதியைச் சோ்ந்த சிலா் அந்த நபரைப் பிடித்தனா்.

இது குறித்து கோயில் நிா்வாகி வடிவேல் (50) களக்காடு போலீஸில் புகாா் செய்தாா். புகாரின் பேரில் அங்குவந்த போலீஸாா் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய ஆசாமியிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா் சிதம்பரபுரம் முத்துநகா் காலனியைச் சோ்ந்த சேகா் மகன் சரவணன் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்தனா். உண்டியல் பணத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT