திருநெல்வேலி

விபத்தில் காயமடைந்த சிறுவன் மரணம்

DIN

திருநெல்வேலியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தான்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலகுலவணிகா்புரத்தைச் சோ்ந்தவா் பாலஇசக்கியம்மாள் (25). இவா், தனது மகன் மித்ரகுருஸுடன் (3) உறவினரான தங்கவேல் (22) என்பவரின் மோட்டாா் சைக்கிளில் சென்றாராம்.

குறிச்சி சாலையில் சென்றபோது அவ்வழியாக வந்த டிராக்டரும், மோட்டாா்சைக்கிளும் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற மூன்று பேரும் பலத்த காயமடைந்தனா். அவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மித்ரகுருஸ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தான். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT