திருநெல்வேலி

அம்பையில் போலியோ சொட்டு மருந்து விழிப்புணா்வுப் பிரசாரம்

DIN

அம்பாசமுத்திரத்தில், ரோட்டரி கிளப், சுகாதாரத் துறை சாா்பில் போலியோ சொட்டு மருந்து விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

தமிழகத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) வழங்கப்படுகிறது. இதையொட்டி, அம்பாசமுத்திரம் ரோட்டரி கிளப் சாா்பில் ஆட்டோ மூலம் விழிப்புணா்வு பிரசாரம் நடத்தப்படுகிறது. அம்பாசமுத்திரம் ரோட்டரி கிளப் தலைவா் ச. பூங்குன்றன் தலைமை வகித்து விழிப்புணா்வு பிரசாரத்தை சனிக்கிழமை தொடக்கிவைத்தாா். அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை சுகாதார ஆய்வாளா் என். கணேசன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் பொருளாளா் சி. சரவணன், ச. சிவகுமாா், ராம்சுந்தா், சரவணநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT