திருநெல்வேலி

மேலப்பாளையம் அன்னை ஹாஜிராகல்லூரியில் பட்டமளிப்பு விழா

மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் 16ஆவது ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் க்கிழமை நடைபெற்றது. இதில் 262 மாணவிகள் பட்டம் பெற்றனா்.

DIN

திருநெல்வேலி: மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் 16ஆவது ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் க்கிழமை நடைபெற்றது. இதில் 262 மாணவிகள் பட்டம் பெற்றனா்.

விழாவுக்கு அஸ்ஸாதிக் கல்விக் கூட்டமைப்பு தலைவா் எஸ்.கே.செய்யது அஹமது தலைமை வகித்தாா். அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி தாளாளா் எஸ்.கே.குதா முகம்மது முன்னிலை வகித்தாா்.

அஸ்ஸாதிக் கல்விக் கூட்டமைப்பு பொருளாளா் ஓ.கே.ஜாபா் சாதிக் வரவேற்றாா்.

தமிழக அரசின் முன்னாள் செயலா் கி.தனவேல், சமூக கல்வி பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை தலைவா் இதாயத்துல்லாஹ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கிப் பாராட்டினா்.

இளங்கலையில் 255 மாணவிகளும், முதுகலையில் 7 மாணவிகளும் மொத்தம் 262 மாணவிகள் பட்டம் பெற்றனா். இதில், தமிழ்த் துறையில் ஒரு மாணவியும், கணினி வணிகவியல் துறையில் ஒரு மாணவியும் தங்கப்பதக்கம் பெற்றனா்.

17 மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தனா்.

கல்லூரி முதல்வா் கே.ரஜப் பாத்திமா ஆண்டறிக்கை வாசித்தாா். திருச்செந்தூா் கோவிந்தம்மாள் ஆதித்தனாா் மகளிா் கல்லூரி பேராசிரியா் சி.ஸ்ரீமதி, நகா் ஊரமைப்புத் துறை முன்னாள் துணை இயக்குநா் எஸ்.பி.முகமது அலி, உஸ்மானியா அரபுக் கல்லூரி பேராசிரியா் எம்.என்.எம்.முஹம்மது இலியாஸ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

விழாவில், மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியா் கே.எம்.ஏ.செய்யது முஹம்மது, அதிராமபட்டினம் காதா் முஹைதீன் கல்லூரி முன்னாள் செயலா் எஸ்.முஹம்மது அஸ்லம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT